Jul 7, 2016

பள்ளி அருகே போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா? சேலம் மாவட்டம் முழுவதும் 200 கடைகளில் திடீர் சோதனை

பள்ளி அருகே போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாவட்டம் முழுவதும் 200 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
போதை சாக்லெட் 
சென்னையில் போதை சாக்லெட் விற்றதாக 2 வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் போதை சாக்லெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மேற்பார்வையில் 3 பேர் கொண்ட 7 குழுவினர்கள் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் பள்ளிக்கூடம் முன்பு கட்டில் போட்டு விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்த சாக்லெட், முறுக்கு, கலர் கலரான மிட்டாய், ஜவ்வு மிட்டாய், நெல்லிக்காய், மாங்காய் போன்ற தின்பண்டங்களை சோதனை செய்தனர்.
பறிமுதல் 
இதில் நிறுவனத்தின் பெயர், முகவரி உள்ளிட்டவை குறிப்பிடாமல் விற்கப்பட்ட சாக்லெட் மற்றும் மிட்டாய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்காரர்களிடம் பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பேன்சி கடை உள்ளிட்ட கடைகளிலும் சோதனை நடத்தினர். அங்கு சாக்லெட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகளில் போதை சேர்க்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கும் எந்த ஒரு அடையாளமும் குறிப்பிடாமல் விற்கப்பட்ட சாக்லெட் பாக்கெட்டுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மாதிரிக்காக சாக்லெட், ஐஸ்கிரீம் ஆகியவை அங்கு சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக அந்த கடையின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டன.
புகையிலை பொருட்கள் 
மேட்டூரை அடுத்த சாம்பள்ளி, குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே உள்ள 30–க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இளங்கோ, மாரியப்பன், சிவானந்தம் உள்ளிட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் போதை சாக்லெட் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த கடைகளில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இதேபோல், பனமரத்துப்பட்டி பகுதிகளிலும் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
200 கடைகளில் சோதனை 
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறும் போது, ‘சேலம் மற்றும் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை நடத்தினோம். மொத்தம் 200 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது பல கடைகளில் இருந்து எந்த ஒரு விவரமும் குறிப்பிடாமல் இருந்த சாக்லெட் பாக்கெட்டுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒவ்வொரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களையும் சந்தித்து இதுதொடர்பாக சில அறிவுரைகளை வழங்கி உள்ளோம்‘ என்றனர்.

போதை வஸ்து விற்றால் கிரிமினல் வழக்கு: மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தகவல்

நாமக்கல்: 'தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான் பராக் போன்ற புகையிலை மற்றும் போதை வஸ்துகளை விற்பனை செய்தால், கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்' என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் கடைவீதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரி கவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களையும், குழந்தைகளின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஜெல்லி, தரமில்லாத மற்றும் காலாவதியான மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் ஆய்வு செய்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், குழந்தைகளுக்கான காலாவதியான பிஸ்கட், ஜெல்லி, பிராண்டட் இல்லாத மிட்டாய்கள் விற்றாலும், கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கொடி கட்டி பறக்கும் போதை பொருள் விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆசியோடு ஜோராக நடந்து வருகிறது.
தமிழகத்தில், ஹான்ஸ், பான்பராக் உட்பட பல்வேறு போதை வஸ்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணகிரியில் தங்கி மொத்த வியாபாரம் செய்து வரும் சில வியாபாரிகள், பெங்களூருவில் இருந்து போதை வஸ்துகளை கடத்தி வந்து, உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆசியோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த போதை வஸ்துகள் விற்பனையில், 100 சதவீதம் லாபம் உள்ளதால், கடைக்காரர்கள் இதை விற்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள பெட்டி கடைகள், கிராம புறத்தில் உள்ள பெட்டி கடைகளில் போதை வஸ்துகளின் விற்பனை தற்போது கொடி கட்டி பறக்கிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது: கிராமம், நகரம் பாகுபாடின்றி ஹான்ஸ், பான்பராக் உட்பட போதை வஸ்துக்களுக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள வடமாநில மொத்த வியாபாரிகளிடம் இருந்து இதை வாங்கி விற்பனை செய்கிறோம். எங்களுக்கு, 100 சதவீதம் லாபம் கிடைக்கிறது. பள்ளி மாணவர்களும் இதை வாங்கி செல்கின்றனர். போலீசார் மற்றும் பிற அதிகாரிகளுக்கு வடமாநில வியாபாரிகள் மாமூல் கொடுப்பதால், எங்களை யாரும் தொந்தரவு செய்வதில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கஞ்சா சாக்லேட் விற்பனை? பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

மேட்டூர்: மேட்டூரில், பள்ளிகள் அருகே, கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கஞ்சா சாக்லேட் விற்பனையை தடுக்க, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேட்டூர், சாம்பள்ளி மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, குஞ்சாண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகளில் நேற்று, மேட்டூர் நகராட்சி, நங்கவள்ளி, கொளத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். ஆனால், கடைகளில் கஞ்சா சாக்லெட் எதுவும் இல்லை. எனினும், 30 கடைகளில் ஆய்வு நடத்திய அலுவலர்கள், சட்டவிரோதமாக விற்ற, 5,000 ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

DINAKARAN NEWS


DINAMALAR NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS



DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAMALAR & DINAKARAN NEWS




DINAMALAR & DINAKARAN NEWS



DINAMALAR NEWS


DINAKARAN NEWS





DINAMALAR NEWS


DINAMALAR NEWS


Tobacco sellers prey on kids to make a quick buck


Deccan Chronical news


Indian Express News


Times of India News



























Officials seize poor quality chocolates

Officials of the Food Safety Department seized five kg of chocolates that were of poor quality and tobacco products worth Rs. 5,000 from shops located near educational institutions in Vellore on Wednesday.
A team of six officials conducted checks at shops located near schools and colleges in Otteri, Bagayam and various parts of Vellore. While the officials have been cracking down on the sale of tobacco products near educational institutions, the recent seizure of drug-laced chocolates in Chennai has turned their attention to “unbranded” chocolates, they said.
V. Senthil Kumar, designated officer of the Food Safety and Drug Administration Department, Vellore, along with food safety officers carried out the checks. “We have sent samples of the chocolates for testing,” he said. Shopkeepers would be fined if they continued to violate norms, he warned.
The department, in the last two weeks, had been keeping a tab on the sale of tobacco products near schools and colleges. Checks had been conducted at Vaniyambadi, Ambur, Vellore and Arakkonam, he added.
“We will continue to check for the sale of unbranded chocolates. Such chocolates are not licensed and do not go through quality checks. The wrappers should contain the name and place of manufacture. If not, such chocolates should be avoided,” he said.

Amendment in Legal Metrology (Packaged Commodities) Rules, 2015 to allow using old packaging material extended

New Delhi, July 6 (KNN) The amendments made in the Legal Metrology (Packaged Commodities) Rules, 2015 to allow stakeholders to use old packaging material to enable stocks to be cleared has been extended up to October 31, 2016.
In a communication, Ministry of Consumer Affairs, Food and Public Distribution said, “…On representations by the stake holders, the said advisory is being extended up to October 31, 2016, to use old packaging material. This advisory is being issued to ensure smooth transition accordingly.”
The letter, however, added that “this issues with the approval of Competent Authority.”
Talking to KNN, DV Malhan, Executive Secretary, All India Food Processors' Association (AIFPA), said, “There is lot of confusion and we sought a clarification from the legal metrology as well as FSSAI regarding this. It is duplicity.”
He said, “Since we made a representation, hence they have extended it. But I don’t think that the problem will be sorted out even after the extension.”
On May 14, 2015, the GOI, Department of Consumer Affairs published a notification in the Indian official gazette, amending the Legal Metrology (packaged commodities) Rules, 2011.
The important highlights of the amendment include: (a) Adopting the definition of retail packages as defined by the Food Safety and Standards Authority of India (FSSAI); and (b) Allow the use of stickers to include all labelling requirement data on imported food packages