Sep 25, 2014

வீட்டிலேயே பான் பராக், குட்கா தயாரிப்பு குற்றவாளியை தப்பவிட்ட அதிகாரிகள் நடு ரோட்டில் வாக்குவாதம்


சென்னை,செப்.25:
சென்னையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான் பராக், குட்கா போன்றவற்றை சமூக ஆர்வலர் ஒருவர் பறிமுதல் செய்து, அதை தயாரித்த வாலிபரை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ஆனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தப்பிக்கவிட்டதால் நடு ரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா, மாவா, ஹன்ஸ் போன்றவற்றை தயாரித்தாலோ, சேமித்து வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ரகசியமாக சென்னையில் பான் பராக், குட்கா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில இடங்களில் சோதனை நடத்தி கொஞ்சம் பொருட்களை பறிமுதல் செய்து விட்டு வழக்கு எதுவும் போடாமல் விட்டு விடுகின்றனர்.
சில இடங்களில் பெரிய அளவில் குடோன்களே சிக்குகிறது, ஆனால் அவற்றின் உரிமையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது தவிர கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவர்கள் என பலரும் மாவா என்னும் ஒருவகை போதை பவுடரை உபயோகிக்கின்றனர். இதை சாதாரணமாக வெற்றிலை பாக்கு கடைகளில் தயாரிக்கின்றனர். குடிசை பகுதிகளில் அதிகம் விற்பனை ஆகின்றது.
சமூக சேவகர் ஒருவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை பல மாதங்களாக அழைத்தும் போதை பொருட்கள் விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை உணவு பாதுகாப்பு கூடுதல் ஆணையரை சந்தித்த அவர் இன்று சோதனையிட வரவில்லையென்றால் நாளையே நோட்டீஸ் அடித்து உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டு பிள்ளைகளுக்கு சென்னை கடைகளில் விற்கப்படும் மாவா, குட்கா, பான்பராக், ஹன்ஸ் போன்றவற்றை பரிசளிப்போம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் 5 அதிகாரிகளுடன் ஒரு குழு சைதாப்பேட்டையில் சில கடைகளில் மட்டும் சோதனையிட்டனர். எல்லா கடைகளிலும் மாவா, பான் பராக், குட்கா, ஹன்ஸ் போன்றவை ஏராளமாக சிக்கி உள்ளது. கோட்டூர்புரத்தில் விஜய் என்ற வாலிபர் மாவாவை தனது இல்லத்தில் சொந்தமாக தினமும் கிலோ கணக்கில் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அடுத்து பட்டினப்பாக்கம் வருவதற்குள் ஜீப்பில் அழைத்து வந்தவர்கள் வழியிலேயே அவரை தப்பிக்க விட்டுவிட்டனர்.
இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர் அதிகாரிகளுடன் நடு ரோட்டில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது. சமூக ஆர்வலரின் கேள்விக்கு அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை, அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை கமிஷனரிடம் புகார் அளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.


DINAMALAR NEWS


பறிமுதல் செய்யப்பட்ட 8.5 கிலோ குட்கா அழிப்பு


பள்ளிபாளையம், செப்.25:
நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய 8.5 கிலோ குட் காவும், 20 கிலோ புகை யிலை பொருள் களையும் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் நேற்று சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பொருள்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நகராட்சி ஆனை யாளர் மகேஸ்வரி தலை மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோத னை பஸ்நிலையம், ஒட்டமெத்தை, திருச்செங்கோடு சாலை பகுதி யில் உள்ள ஓட்டல்கள், தேநீர் கடை கள், மளிகை கடைகளில் தொடர்ந்து நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 133 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகள், 8.5 கிலோ பான் மசாலா, குட்கா, 20 கிலோ புகையிலை பொ ருள்கள் கைப்பற்றப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் 5 விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மறைமலை நகரில் ரெய்டு காலாவதியான தின்பண்டங்கள் குட்கா பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


செங்கல்பட்டு, செப்.25:
மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் வந்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில் நகர மன்ற தலைவர் கோபிகண்ணன், நகராட்சி ஆணையர் மனோகரன், துப்புரவு ஆய்வாளர் புகழேந்தி உள்பட நகராட்சி ஊழியர்கள் மறைமலை நகராட்சியில் உள்ள எம்ஜிஆர் சாலை, பவேந்தர் சாலை, பாரதியார் சாலை, ஜிஎஸ்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள கடைகளில், காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி, நகராட்சி குடோனில் வைத்தனர்.
மதுராந்தகம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் உதவி பொறியாளர் ரங்கசாமி, செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட மாசு கட்டுப் பாட்டு துறை அலுவலர்கள் மதுராந்தகம் நகரின் கடைகளில் அதிக மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் கவர், கப் போன்றவை பயன்படுத்துவதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை, தேரடி தெரு, ஆஸ்பிட்டல் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள் களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கண்ட அதிகாரிகளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உள்பட சுகாதார துறை அலுவலர்கள் கடைகளில் பயன்படுத்திய 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் கருங்குழி பேரூராட்சியில் பஜார் வீதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தையும் சிறு சிறு துணுக்குகளாக மெஷின் மூலம் நறுக்கப்பட்டு அவற்றை சாலையமைக்க பயன்படுத்துவோம்.
வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை தொடரும் என உதவி பொறியாளர் ரங்கசாமி தெரிவித்தார்.
திருப்போரூர் பகுதி வணிக நிறுவனங்களில் நேற்று மாசு கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

பொன்னமராவதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அழிப்பு



பொன்னமராவதி, செப்.25:
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர்.
பொன்னமராவதி பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆணையின்படியும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அறிவுறுத்துதலின் பேரிலும், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆலோசனையின்படியும், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா அம்பலகாரர் முன்னிலையிலும் வரித்தண்டலர் கேசவன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம் மற்றும் குடிநீர் பணியாளர் பாபு, துப்புரவு பணியாளர்கள் குழுவாக கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பைகள் மற்றும் கப்புகள் சுமார் 102 கிலோ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மறு உபயோகத்திற்கு பயன்படாத வகையில் அழிக்கப்பட்டது.
மேலும் ரூ.7ஆயிரத்து 500 மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சௌந்திரராஜன் ஆகியோரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற தொடர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் அரியலூரில் பறிமுதல்



அரியலூர், செப். 24:
அரியலூரில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.
நேற்று அரியலூர் சப்.கலெக்டர் சந்திரசேகரன் சாகமூரி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று அரியலூர் பஸ் நிலையம், எம்பி கோயில் தெரு, சின்னக்கடை தெரு, சத்திரம், மாதா கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பெட்டிக்கடை, மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பல்வேறு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அழிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இந்நிகழ்ச்சியில், உதவியாளர்கள் ஸ்டாலின்பிரபு, நேர்முக உதவியாளர் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நூடுல்ஸ்

வீடுகளில் சமைக்கும் உணவுகளில், மிகவும் சுலபமாக இரண்டே நிமிடங்களில் தயார் செய்யும் உணவுதான் நூடுல்ஸ். இதனை, வாரத்தில் ஒருநாள் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் உள்ளது. 
குழந்தைகள் விரும்பிக் கேட்டால் பெற்றோர்களுக்கு செய்து கொடுக்கவும் எளிதான உடனடி உணவாக நூடுல்ஸ் மாறிப்போய் விட்டது. இத்தனை கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் நூடுல்ஸ் அதன் சுவைக்கு நிகரான அபாயங்களையும் கொண்டுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பது உடல்நலத்துக்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியது. 
நம் உடலுக்கு வரும் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நூடுல்ஸில் சேர்க்கப்படும் மெழுகு உறிஞ்சி உடலில் தங்க விடாமல் செய்துவிடுகிறது. இதில் மூளைச்செல்களை உருவாக்கும் முக்கிய வைட்டமின்களும் அடங்கும். இது தவிர ஹார்மோன்களை சரியாக சுரக்கச்செய்து அழகான சருமத்தையும் கேசத்தையும் பராமரிக்க கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உதவுகின்றன.
இவையனைத்தும் மெழுகு சேர்க்கப்பட்ட நூடுல்ஸ்களை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்காமல் போகின்றன. நூடுல்ஸ் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உடல் பருமன், இடுப்பிலும் வயிற் றிலும் தேவையற்ற சதைகளை உருவாக்குதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதனால், மூளைத்தாக்கு நோய் (ஸ்ட்ரோக்), நீரிழிவு போன்றவை எளிதாக வருகின்றன. 
நூடுல்ஸில் உள்ள மைதா, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது. நூடுல்ஸில் வெள்ளை நிறத்துக்காக சேர்க்கப்படும் பிளீச்சிங் பொருளான அலோக்ஸான் (alloxan) கணைய சுரப்பிகளில் இன்சுலினை சுரக்கச் செய்வதை பாதிப்படையச் செய்து நீரிழிவு நோய் வருவதற்கு வழிவகுக்கிறது. மக்களுக்கு அலோக்ஸான் பற்றிய விழிப்புணர்வு இல்லை. 
தென்கொரிய ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு இந்தியாவில் பெண்களுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவதால் அதிக தீமைகள் வருவதைத் தெரிவித்துள்ளது. நூடுல்ஸில் உள்ள ‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை பாதிக்கிறது. இதனால் பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரும் அபாயம் உண்டாம். 
பெரும்பான்மையான மக்களுக்கு இயற்கை தானியங்களால் செய்யப்பட்ட ஆரோக்கியம் தரும் நூடுல்ஸ் கடைகளில் கிடைப்பது தெரிவதில்லை. இயற்கை முறையில் வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி போன்றவற்றால் செய்யப்படுகிற நூடுல்ஸ் இப்போது கிடைக்கின்றன. இவற்றில், உடலுக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி-6, நியாசின், மக்னீசியம் போன்றவை உள்ளன. 
இவை உடலில் தாறுமாறான இன்சுலின் அளவை தடை செய்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டே நிமிடங்களில் தயார் செய்துவிடக் கூடிய இன்ஸ்டன்ட் உணவு உண்மையிலேயே அவசியமானதுதானா, ஆரோக்கிய மானதுதானா என்பதையும் இனி இரண்டு நிமிடங்கள் யோசியுங்கள். நூடுல்ஸில் உள்ள‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

டாக்டர் மனு பிரதீஷ்

REGISTRATION OF STREET FOOD VENDORS


The Food Safety and Standard Authority of India have started the registration of the street food vendors in the whole of India. In exercise of the powers conferred under section 92 of the Food Safety and Standards Act, 2006, FSSAI has proposed Draft of Food Safety and Standards Regulation, 2010 under which Part 3.2 makes it mandatory for all Food Business Operators in the country to be registered or licensed in accordance with the procedures laid down in the regulation. Hence Licensing or Registration of Food Business Operators (FBOs) shall be an important activity under FSSAI; this not only envisages integrating the individual licensing activities of various divisions of FSSAI under a single Licensing System, at Central or State Level, but also requires Registration of all Food Business Operators using Local Administration Bodies, when their activity does not require a License. All of these are covered under the Food Safety & Standards Regulation, 2010 under deliberation.
The Registration of the food vendors has started since April 2014 in various cities across India. The food vendors can go with valid documents to nearby General Resource Centres of their cities and do the registration.
How to Apply for License/Registration
For License: FBO’s are required to have a valid personal e-mail ID and Mobile Number which should be kept active.
For Registration: FBO’s are required to have a valid personal e-mail ID OR Mobile Number
The name of the FBO should be spelt correctly in the application as it appears in the License.
On successful submission of application, the system will generate a unique Reference Id for the application.
Take a print out of the “Acknowledgment” and “Online Application Form” and attach the Demand Draft for the fee (if payment mode is Demand Draft) and supported documents (Refer Document Checklist) required as part of the application and submit the application to your State Authority or Regional Office of Food Safety and Standards Authority of India, within 15 days from the date of submission of application online.
Last date for registration of food vendors - February, 2015.
The Fees for Registration Rs 100

It was not the dead lizard





Test report says DJ Halli school children fell sick due to the presence of E.Coli
Food samples from the Government Urdu Higher Primary School in DJ Halli sent for testing to the State Public Health Institute (PHI) have been found to be contaminated with E.Coli and Enterobacter. Certain strains of these bacteria can cause food poisoning and may even be life-threatening.
Nearly 360 children from the school had been rushed to Dr. Ambedkar hospital on Friday after they complained of stomach ache and vomiting sensation during class hours. They had earlier consumed midday meals served to them at the school, supplied by Akshaya Patra Foundation of ISKCON.
Samples of plain rice and sambhar were collected and sent to PHI for bacteriological analysis. The presence of E.Coli and Enterobacter were confirmed.
PHI Deputy Director Jaikumar, who is also the designated officer for Food Safety and Standards Act (FSSA) in the State, told The Hindu on Tuesday that the presence of E.Coli in the food samples indicated that there was “handling contamination.”
“Although a lizard had fallen in the rice served to the students, the report does not suggest the presence of Salmonella. This rules out the possibility of any bacteria having been released from the lizard. Lizards are a carrier of Salmonella,” Dr. Jaikumar said.
Sources in the Bangalore Urban District Surveillance Unit said a detailed report, based on the laboratory findings, had been forwarded to State Surveillance Officer Venkatesh and Bangalore Urban District Health Officer (DHO) M. Rajani on Tuesday. Dr Rajani said she is yet to get the report.
Quoting the laboratory findings, sources in the State Surveillance Unit said the presence of E.Colibacteria clearly indicated that the food was unfit for human consumption.
“Under the Food Safety and Standards Act, legal action has to be initiated against Akshaya Patra Foundation of ISKCON, which had supplied food to the school,” a source said.
Meanwhile, parents in the school refused to allow their children to eat food for the third day in a row in view of Friday’s incident. The headmaster, Zaheera Khanum, said that a meeting would be convened with parents to convince them that the food is safe for consumption of children.
The Department of Public Instruction and Bangalore Urban Zilla Panchayat has issued a notice to Akshaya Patra Foundation to which it is yet to respond.