Sep 14, 2014

கலப்படம் செய்து விற்பனை செய்வதாக புகார் சேலத்தில் குடோனில் பதுக்கிய ரூ.6 லட்சம் வெல்லம் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், செப்.14-
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கலப்படம் செய்து விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். 
வெல்லம் உற்பத்தி நிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, வட்டக்காடு, கருப்பூர், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள், செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், செவ்வாய்பேட்டை பகுதி வெல்ல வியாபார கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட, அதி ரசாயனம் கலந்துள்ளதாகவும், வெல்ல தயாரிப்பிற்கு சர்க்கரை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறி வெல்லத்தை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதனால் கடந்த 2 வாரமாக வெல்லம் உற்பத்தியாளர்கள், தங்களது வெல்ல உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குடோனில் பதுக்கல்
இந்தநிலையில், ஓமலூர் பகுதியில் இருந்து ரசாயனம் கலந்த சுமார் 6 டன் வெல்லம் லாரியில் கொண்டு வந்து செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வியாபாரிக்கு சொந்தமான குடோனில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாகவும், மேலும், வெல்லம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நேற்று காலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வெல்ல உற்பத்தியாளர்கள் புகார் செய்தனர். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் செவ்வாய்பேட்டை பகுதியில் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது குடோனில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ரசாயனம் கலந்த வெல்லம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 
பறிமுதல்
இதையடுத்து மூட்டை மூட்டையாக சாக்குபையில் இருந்த வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பரிசோதனைக்காக சில வெல்லத்தை மட்டும் மாதிரிக்கு எடுத்தனர். அப்போது, வியாபாரிகள் சிலர் லாபநோக்கத்தோடு செயல்பட்டு வெல்லத்தை மறைமுகமாக கொள்முதல் செய்வதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. 
பேட்டி 
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் சர்க்கரை பாவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. வெல்லத்தில் சர்க்கரை மூலப்பொருட்களாக இருந்தாலும், அழுக்கு எடுப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சப்போலேட், ஹைட்ரோசன், சோடா உப்பு போன்ற ரசாயனம் சேர்ப்பதால் மனிதர்களுக்கு உணவு குழாயில் பாதிப்பு, கல்லீரல், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டத்தில் தெரிவித்துள்ளவாறு தரமான வெல்லத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வெல்ல உற்பத்தியாளர்களிடம் பலமுறை விழிப்புணர்வு செய்துள்ளோம். 
80 சதவீதம் சர்க்கரை
கரும்புச்சாறு மூலம் தான் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் லாபம் அதிகமாக கிடைப்பதால் சர்க்கரை 80 சதவீதமும், கரும்புச்சாறு 20 சதவீதம் கலந்து வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வெல்ல உற்பத்தியாளர்கள் தவிர்க்க வேண்டும். ரசாயனம் கலந்த வெல்லத்தை கொள்முதல் செய்யக்கூடாது என்று ஏற்கனவே வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
அதேசமயம், ரசாயனம் கலந்த வெல்லத்தை சில உற்பத்தியாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்குவதாக வந்த தகவலையடுத்து குடோனில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லம் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெல்லத்தை கொண்டு வந்த உற்பத்தியாளர்கள் யார்? இதை மொத்தமாக வாங்கிய வியாபாரிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் வியாபாரியின் குடோனுக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

DINAMANI NEWS


ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட வெல்லம் லாரிகள் சிறைபிடிப்பு சேலம் உற்பத்தியாளர்கள் அதிரடி உணவு பாதுகாப்பு அலுவலர் விசாரணை




சேலம், செப்.14:சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் கரும்பு சாறுக்கு பதிலாக சர்க்கரை மற்றும் ரசாயனத்தை அதிகளவில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, வெல்லம் உற்பத்தி செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரு வாரமாக வெல் லம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் நாள்தோறும் வெல்ல உற்பத்தியாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்து தூய வெல் லம் தயாரிக்க விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென வெல்ல உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதாவை சந்தித்தனர். அப்போது வெல்லம் உற்பத்தி செய்யும் சிலர் அதிகாரிகளின் உத்தரவையும் மீறி ரகசியமாக ரசாயனம் கலந்த வெல் லத்தை உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர். அவர்கள் வெல்லம் கொண்டு வந்த இரண்டு லாரிகளை பிடித்து வைத்துள்ளோம். அவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறினர்.
இதனையடுத்து லாரி களை சிறைபிடித்த இடத்திற்கு நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்தனர். அப் போது சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள சரவணன் என்பருக்கு சொந்தமான வெல்ல குடோனில் இருந்த வெல் லத்தை ஆய்வு செய்த னர். அவற்றில் ரசாயனம் கலந்துள்ளதா என பரிசோதிப்பதற்காக வெல்லங்களை எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்த னர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள வெல்லம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வெல்ல உற்பத்தியில் 75 சதவீதம் சர்க்கரையும், 25 சதவீதம் கரும்பு சாறும் கலப்படம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் வெளீர் மஞ்சள் நிறத்தில் தூய வெல்லம் போல் காட்சியளிப்பதற்காக பல்வேறு ரசாயனங்களை கலப்படம் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் வெல்ல மண்டிகளில் ஆய்வு மேற் கொண்டு கலப்பட வெல் லத்தை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் வெல்ல உற்பத்தியில் ரசாயனம் மற் றும் சர்க்கரை கலக்க கூடாது என கூறி வெல்ல உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்துள் ளோம். இந்நிலையில் வியாபாரிகளின் தூண்டுதலின் பேரில் வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர் ரகசியமாக வெல்லம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து நேரடி ஆய்வு செய்யப்பட்டது. இவற்றின் மாதிரி வெல்லங்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி, வரும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ethnic food to make entry into Dasara fest this year

Have you tasted tribal food? If not, then don’t miss to visit this year’s Dasara Food Festival, which, for the first time, will be offering cuisines of tribals like Soligas, Jenukurubas, and others.
Soliga and Jenukuruba families reside in parts of H.D. Kote taluk, a tribal-dominated taluk of Mysore district.
Major attraction
In alliance with the large-sized Adivasi Multipurpose Cooperative Societies (LAMPS) and a Federation of Adivasis, stalls will be set up featuring tribal-style food items.
This would be one of the attractions of the food festival, said members of subcommittee overseeing the arrangements for the event.
Medicinal value
Another attraction will be the food items with medicinal value, which are also being featured for the first time.
This year, the festival will have 110 stalls featuring cuisines of North Karnataka to the mouth-watering cuisines from Kerala and north Indian States.
Coverage
About 20 food traditions, covering different districts in Karnataka and other States would be introduced for the benefit of tourists, they said.
Deputy Director of Food and Consumer Supplies K. Rameshwarappa, who is the working president of the Dasara Food Festival, told presspersons here on Friday that 271 applications had been received so far from individuals and hotels/restaurants from across the State.
Applications
The last date for receiving applications has been extended till September 15. “Stalls will be allocated based on the merits of applications,” he said.
The list of food prices had been collected from the applicants, along with the application, and the rate chart must be displayed in front of their respective stalls, he added.
Team
A team of officers from the departments of Food and Civil Supplies, Weights and Measurements and the Food Safety will monitor quality of food given to visitors.
“Maximum care will be given for hygiene and quality food,” he said and added that seminars would be conducted daily from 4 p.m. to 6 p.m. at the venue — Bharat Scouts and Guides Grounds — to educate visitors on Food Safety and Standards Act.
Stalls selling organic food such as indigenous rice would function. Cooking and eating competitions and competition to identify foodgrains for children would be conducted.
Industrialist Suresh Kumar Jain, who is the president of the Dasara Food Festival, said cuisines from Gujarat, Rajasthan, and other States would be there to cater to all types of visitors. Managements of food processing industries in Mysore will display their food products at the festival.
Awareness
He said awareness would be created on opportunities of setting up food processing industries with the support from the Ministry of Small and Medium Enterprises, Government of India, which gives subsidy in the range of 50 to 80 per cent on the projects proposed for setting up such units.

கலப்பட வெல்லம் விற்க முயற்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

சேலம்: சேலத்தில், கரும்பு வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர், கலப்பட வெல்லத்தை தயாரித்து, செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முயன்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரி, அதை தடுத்து நிறுத்தி, வெல்லத்தை ஆய்வு செய்த பின்னரே, விற்க வேண்டும் என, எச்சரித்தார்.சேலம் மாவட்டத்தில், ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில், 200க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் உள்ளன. இவர்கள், கரும்பை அரவை செய்து, அதன் மூலமே, அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் தயாரிக்க வேண்டும். ஆனால், சர்க்கரை, சோடியம் பாஸ்பேட் மற்றும் கெமிக்கல் பவுடரை கலந்து, வெல்லம் தயாரிப்பதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், வெல்லம் உற்பத்திக்கு தடை விதித்தார்.செவ்வாய்பேட்டை, லீபஜார் மார்க்கெட் வியாபாரிகளும், கலப்பட வெல்லத்தை விற்பனை செய்யக்கூடாது என, அறிவுறுத்தினார். கடந்த, பத்து நாட்களுக்கும் மேலாக வெல்லம் விற்பனை நடக்கவில்லை. இந்நிலையில், வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர், இரண்டு மினிலாரிகளில், 514 சிப்பம் கொண்ட வெல்லத்தை எடுத்து வந்து, செவ்வாய்பேட்டையில் விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது.மற்ற வெல்ல உற்பத்தியார்கள், உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதாவிடம் புகார் செய்தனர். அவர் ஆய்வு மேற்கொண்டு, தரமானதா, தரமற்றதா என்ற முடிவு வந்தபின் தான், வெல்லத்தை விற்பனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி சென்றார்.