Dec 24, 2012

Coimbatore License Mela - Press Reports





எடை, தேதி, காலாவதி நாள் அவசியம் லேபிள் இல்லாத உணவு பொருளை விற்க கூடாது தமிழக உணவு பாதுகாப்பு திட்ட கமிஷனர் பேச்சு


கோவை, டிச.24:
லேபிள் இல்லாத உணவு பொருட் களை விற்க கூடாது, பாக்கெட்டில் எடை, தேதி, காலாவதி நாள் அவசியம் குறிப்பிட வேண்டும் என உணவு பாதுகாப்பு திட்ட ஆணையர் குமார்ஜெயந்த் பேசினார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு திட்ட ஆணையர் குமார்ஜெயந்த் பேசியதாவது:
உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுத்தமாக, தரமானதாக, விரைவில் கெட்டுப்போகாத அளவுக்கு தயாரிக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். உணவு பொருள் சைவம் என்றால் பச்சை புள்ளியும், அசைவம் என்றால் பிரவுன் புள்ளியும் பாக்கெட்டில் குறிப்பிட வேண்டும். உணவு பொருள் தயாரிப்பில் ஈடுபடுவோர் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்களுக்கு லேபிள் மிகவும் அவசியம். லேபிள் இல்லாத பொருட்களை தயாரித்து விற்க கூடாது. அதை கடைக்காரர்கள் வாங்கவும் கூடாது. லேபிளில் பொருள், அதன் எடை, உற்பத்தி தேதி, காலாவதி தேதி இருக்க வேண்டும்.
சாலையோர கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி பெரும்பாலும் சுகாதாரம் அற்றவையாக உள்ளன. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர். இது உடல்நலனுக்கு மிக மிக ஆபத்தானது. குடிக்கவும், கழுவவும் தனித்தனியாக தண்ணீர் வைத்திருக்க வேண்டும். மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு குமார்ஜெயந்த் பேசினார்.
கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பேசுகையில், “எந்த ஒரு பொருளுக்கும் பிராண்ட் நேம் இருக்க வேண்டும். பெயர் பெற்ற நிறுவனத்தின் பிராண்ட் நேமை போல காப்பியடித்து விற்பனை செய்யக்கூடாது. தரமான, கலப்படமற்ற, நோய் வராமல் பாதுகாக்க கூடிய அளவுக்கு உணவு பொருள் விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்ல, தரமான உணவு கிடைக்க வேண்டும். இதை வியாபார நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். வியாபார நிறுவனங்கள் மீது வழக்கு போடுவது நோக்கம் அல்ல. உணவே மருந்து, மருந்தே உணவு என்று திருமூலர் கூறியிருக்கிறார். உணவை தவறாக சாப்பிட்டாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும்,என்றார்.
அன்னபூர்ணா குரூப் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், சட்டமான பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்க கூடாது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி தவறு செய்தவர்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது. எனவே இது போன்ற கடுமையான தண்டனைகள் நீக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். சென்னையில் உள்ளது போல கோவையில் உணவு பொருட்களை சோதனை செய்ய ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என்றார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், சுகுணா கோழி பண்ணை நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன், தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கருப்பையா, உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் ஜெயக்குமார், அதிகாரிகள் சீனிவாசன், சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.

Dina Thanthi

«ôHœ Þ™ô£î àí¾ ªð£¼†è¬÷ MŸè‚ Ã죶
àí¾ ð£¶è£Š¹ F†ì ݬíò£÷˜ â„êK‚¬è
«è£¬õ,®ê.24-
«ôHœ Þ™ô£î àí¾ ªð£¼†è¬÷ MŸè‚ Ã죶 â¡Á àí¾ ð£¶è£Š¹ F†ì ݬíò£÷˜ ÃPù£˜.
輈îóƒ°àí¾ ð£¶è£Š¹ ñŸÁ‹ îó ê†ì‹ ªî£ì˜ð£ù 輈îóƒ° «è£¬õ Cˆî£¹ÉK™ àœ÷ ñ£ïèó£†C ðœOJ™ «ïŸÁ ïì‰î¶. ñ£õ†ì èªô‚ì˜ â‹.è¼í£èó¡ î¬ô¬ñ A «ðCù£˜. ÞF™ îIöè ÜóC¡ àí¾ ð£¶è£Š¹ˆ ¶¬ø ݬíò£÷˜ °ñ£˜ ªüò‰ˆ èô‰¶ ªè£‡´ «ðCù£˜.
ÜŠ«ð£¶ Üõ˜ ÃPòî£õ¶:-
«ôHœ Þ™ô£ñ™ MŸè Ã죶àí¾ å¿ƒ° º¬ø ê†ì‹ ïiù è£ôˆFŸ«èŸð ñ£ŸP ܬñ‚èŠð†´œ÷¶. àí¾ ªð£¼œ îò£K‚°‹ GÁõùƒèœ ²ˆîñ£è, îóñ£ùî£è M¬óM™ ªè†´Š«ð£è£î Ü÷¾‚° îò£K‚è «õ‡´‹. ²ˆîñ£ù î‡a¬ó ðò¡ð´ˆî «õ‡´‹. àí¾ ªð£¼œ ¬êõ‹ â¡ø£™ ð„¬ê ¹œO»‹, ܬêõ‹ â¡ø£™ Hó¾¡ ¹œO»‹ 𣂪膮™ °PŠHì «õ‡´‹.
àí¾ ªð£¼œ îò£KŠH™ ß´ð´«õ£˜ îƒèœ ¬èè¬÷ ²ˆîñ£è ¬õˆF¼‚è «õ‡´‹. «ð‚Aƒ ªêŒòŠð†ì àí¾ ð‡ìƒèÀ‚° «ôHœ I辋 ÜõCò‹. «ôHœ Þ™ô£î ªð£¼†è¬÷ îò£Kˆî MŸè Ã죶. ܬî è¬ì‚è£ó˜èœ õ£ƒè¾‹ Ã죶. «ôHO™ ªð£¼œ, Üî¡ â¬ì, àŸðˆF ªêŒòŠð†ì «îF, è£ô£õF «îF ÝAò îèõ™èœ Þ¼‚è «õ‡´‹. ꣬ô«ò£ó è¬ìèO™ MŸèŠð´‹ «ð£‡ì£, ðxTèœ ªð¼‹ð£½‹ ²è£î£ó‹ ÜŸø¬õò£è àœ÷ù. 强¬ø ðò¡ð´ˆFò ⇬í¬ò F¼‹ð F¼‹ð ðò¡ð´ˆ¶A¡øù˜. Þ¶ àì™ ïôˆ¶‚° Iè Iè Ýðˆî£ù¶. °®‚辋, è¿õ¾‹ îQˆîQò£è î‡a˜ ¬õˆF¼‚è «õ‡´‹. ñ‚èO¡ ïô‚è£è ªè£‡´ õóŠð†´œ÷ àí¾ ð£¶è£Š¹ ê†ìˆ¬î Üñ™ð´ˆî ªð£¶ñ‚èÀ‹, Mò£ð£KèÀ‹ 制¬ö‚è «õ‡´‹.
Þšõ£Á °ñ£˜ ªüò‰ˆ «ðCù£˜.
èô‰¶ ªè£‡ìõ˜èœ
輈îóƒA™ ÿ A¼wí£ vi†v A¼wí¡, Ü¡ùÌ˜í£ G˜õ£è Þò‚°ù˜ YQõ£ê¡, ²°í£ «è£N ð‡¬í G˜õ£è Þò‚°ù˜ ²‰î˜ó£ü¡, àí¾ ð£¶è£Š¹ àîM ݬíò£÷˜ ªüò‚°ñ£˜, ÜFè£Kèœ YQõ£ê¡, ê‰Fó¡ ñŸÁ‹ 200-‚°‹ «ñŸð†ì æ†ì™ àK¬ñò£÷˜èœ, Mò£ð£Kèœ èô‰¶ ªè£‡ìù˜.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் சமரசம் கிடையாது:கமிஷனர் குமார் ஜெயந்த் உறுதி

கோவை : ""உணவுப்பொருள் உற்பத்தியில் அடிப்படை சுகாதார வசதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தில், எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை,'' என, உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த் பேசினார்.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம், தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை மற்றம் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குறித்த கருத்தரங்கு, நேற்று கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஓட்டல்கள் உட்பட உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு , "உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் - 2006'ன் கீழ் உரிமம் பெறுதல், பதிவு செய்தல் உள்ளிட்ட அணுகுவசதிகள் அளிப்பது குறித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ""உணவுப் பொருட்களில் சுகாதார முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை 75 சதவீதம் பேர் உணர்ந்தவர்களாக இல்லை.
கோவையில் தரமற்ற உணவு விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணைகள் மீதும், கலப்பட தேயிலை விற்பனை செய்த நபர்கள் மீதும் சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த் பேசியதாவது:
சர்வதேச ஏற்றுமதியாளர்கள் முதல் சாதாரண டீக்கடை வைத்துள்ளவர்கள் வரை உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட வரம்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாம் உண்ணும் உணவு சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் சட்டம் அமைந்துள்ளது.
ஓட்டல்களில் சமைப்பதற்கும், தூய்மை செய்வதற்கும் பயன்படுத்தும் தண்ணீரை அருகருகில் வைக்கக் கூடாது. மீதமாகும் உணவை மீண்டும் பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடாது. சைவம் மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். சுத்தமான, சுகாதாரமான குடிநீரை நீங்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
சட்டம் குறித்து அச்சம் தேவை இல்லை. அதே நேரத்தில், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், சில்லரை வியாபாரம் செய்வோர் என அனைத்து தரப்பினரும் சுகாதார முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதில், எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை.
இவ்வாறு, உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த் பேசினார்.
"கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், "அன்னபூர்ணா ஓட்டல்' நிர்வாக இயக்குனர் சீனிவாசன், "சுகுணா பவுல்ட்ரி' நிர்வாக இயக்குனர் சுந்தரராஜன், நடமாடும் உணவு வர்த்தகர்கள் சங்க தலைவர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுவரை 20,000 லைசென்ஸ்
தமிழக உணவு பாதுகாப்பு கூடுதல் கமிஷனர் டாக்டர் ஜெயகுமார் பேசுகையில், ""முதலில் இருந்த சட்டத்தின்படி, உணவுப் பொருட்களில் கலப்படம் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய உணவு பாதுகாப்பு சட்டம், உணவின் தரத்தை நுகர்வோருக்கு உறுதி அளிக்கும் விதத்தில் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பதிவு செய்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 1.56
லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 20 ஆயிரம் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.